Thursday, 21 March 2019

பிறன்மனை

எதிர்ரெதிரே அமர்ந்திருக்கும்
நம்மிருவரிடையே தேங்கிநிற்கும்
காற்றை உறிஞ்சி வெற்றிடமாக்கி
கூச்சலிட்டு ஆனந்த களியாடும்
நம் உடல்களை வள்ளுவன்
எழுத்தாணியால் வழுக்கு தடம்
போட்டு நாற்காலியை எட்டி உதைத்து/தான்

1)சொன்னான் "அறம் என்னும் கிரீஸ்
     டப்பாவை எப்படி உதைத்தாய் என்று?"

2)அங்கே நடனமாடும் கால்களின்
    இசையே தற்பொழுது நாமிருவருக்குள்ளும்
    இட்டு நிரம்பியிருக்கிறது 

தராசு

 அவன் யாசிக்கும் பொழுது இல்லை என சுலபமாக மறுக்கலாம் நியாய தராசில் நமக்கான காரணங்களை அடுக்கி  முள்ளை நம் பக்கம் வளைக்கலாம் குப்பைத்தொட்டியி...