Monday, 5 February 2018

கேவல்

தழுவிச்  செல்லும் 
காற்றின் புரடியை பற்றி இழுத்து
அதன் மென்னியை
மெல்லத் திருகுங்கள்
செவிப்பறையில் செல்லும்
அதிர்வலைகளில் மட்டும்
கிளர்ச்சி
கோபம்
ஸ்கலிதம் மற்றும் இன்ன பிறவற்றை
நீங்கள் மரணிக்கும் வரை
கேட்டுக்கொண்டிருக்கலாம்
ஒருக்காலும் பிடியை
தளர்க்கசொல்லாது.

No comments:

Post a Comment

தராசு

 அவன் யாசிக்கும் பொழுது இல்லை என சுலபமாக மறுக்கலாம் நியாய தராசில் நமக்கான காரணங்களை அடுக்கி  முள்ளை நம் பக்கம் வளைக்கலாம் குப்பைத்தொட்டியி...