Tuesday, 2 July 2019

Sell Me This Pen

உள்கனன்றெழும் சினத்தை
நான்கு தங்க  வட்டிலில் வைத்து
விற்பனைக்கு காத்திருந்தேன்
முதலில் வந்த உஷை
ஓர் விண்டு அள்ளி வாயிலிட்டு
ஐயோ காமம் என அலறினாள்
வருணனனோ தங்க வட்டிலில்
வைத்து விற்கும் போதே தெரிகிறது
உன் தாழ்வுணர்ச்சி என்கிறான்
மீதம் இரண்டையும்
துக்கம் தாளாமல்
நானே உண்டுவிட்டேன்

No comments:

Post a Comment

தராசு

 அவன் யாசிக்கும் பொழுது இல்லை என சுலபமாக மறுக்கலாம் நியாய தராசில் நமக்கான காரணங்களை அடுக்கி  முள்ளை நம் பக்கம் வளைக்கலாம் குப்பைத்தொட்டியி...