நம்மிருவருக்கும் இடையே
தர்ஜனி முத்திரையில்
சம்மணம்மிட்டு அமர்ந்திருக்கும்
மௌனக்குமிழியை உடைக்கும்
பாடலை கேட்கத் துவங்கினேன்
உன்மேல் கொண்ட
வன்மங்களை அள்ளி
தூரிகையால் விசிறி
உன் இறைஞ்சும் கைகளை
குமிழியின் மேல் வரைந்து
முகம் புதைத்துக் கொண்டேன்
குரல்வளை மெல்ல இறுக
அப்பாடலின் இசை
இனிதே துவங்கியது
தர்ஜனி முத்திரையில்
சம்மணம்மிட்டு அமர்ந்திருக்கும்
மௌனக்குமிழியை உடைக்கும்
பாடலை கேட்கத் துவங்கினேன்
உன்மேல் கொண்ட
வன்மங்களை அள்ளி
தூரிகையால் விசிறி
உன் இறைஞ்சும் கைகளை
குமிழியின் மேல் வரைந்து
முகம் புதைத்துக் கொண்டேன்
குரல்வளை மெல்ல இறுக
அப்பாடலின் இசை
இனிதே துவங்கியது
No comments:
Post a Comment