Saturday, 28 January 2017

நோன்பு துறத்தல்






அழகியே
இவ்விரதம் எல்லா வியாழன்களை போலல்லாமல்
பதினாறு ஆண்டுகள் நீளமானது
பேரழகியே அப்பொழுது
நினைவிலியில் கண்கள் கண்ட
கதலிப்பூவின் தேன் நாவின்
சுவையரும்புகளில் தீ பற்றவைக்கும்
கன்னங்களில் நேர்கோடாய் செல்லும்
அத்துளிகளை திரட்டி தடித்த
சட்டத்தின் மீது வா எறிவோம்


(ஐரோம் ஷர்மிளாவிற்கு)


No comments:

Post a Comment

தராசு

 அவன் யாசிக்கும் பொழுது இல்லை என சுலபமாக மறுக்கலாம் நியாய தராசில் நமக்கான காரணங்களை அடுக்கி  முள்ளை நம் பக்கம் வளைக்கலாம் குப்பைத்தொட்டியி...