Wednesday, 6 September 2017

துர்மரணங்கள் (2)

உணவூட்டி திரும்புகையில்
மின்விசிறியில் சிக்கிய பறவை
காருக்கு அடியில் கழுத்தறுபட்ட
நிலையில் இரு  பூனைக்குட்டிகள்
மறுநாள் அதே இடத்தில்
சயனித்திருந்த  தாய்ப்பூனை
இவை எல்லாவற்றிலும்
 உனது மரணத்தின் சாயல்
வந்து தொற்றிக்கொள்ளுகிறது
ஞாயிற்றுக்கிழமைகளில் மீன்குழம்பை
தூக்கி  வைக்கும் கரித்துணியில்
எங்களது ரத்தக்கறை
படிந்த கைகளை துடைத்துக்கொள்கிறோம்

(சரண்யாவிற்கு )

No comments:

Post a Comment

தராசு

 அவன் யாசிக்கும் பொழுது இல்லை என சுலபமாக மறுக்கலாம் நியாய தராசில் நமக்கான காரணங்களை அடுக்கி  முள்ளை நம் பக்கம் வளைக்கலாம் குப்பைத்தொட்டியி...